எந்திரன் விளம்பர படங்கள்...........!!



எந்திரன் வெற்றி பெற தமிழ்துளியின் வாழ்த்துக்கள் ..............!!

Posted in | 3 comments

ப்ரியாமணிக்கு தேசிய விருது.....!!



சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணிக்கு
தமிழ்துளியின் உளமிகுந்த வாழ்த்துக்கள் .......!!!!

Posted in | 1 comments

முஷாரபை கைகழுவுகிறார் அதிபர் புஷ.....!!

http://pakobserver.net/200805/19/todayspic/19052008-front.jpg

அதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் யூசுப் ரசா கிலானியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் தனது நிர்வாகம் தொடர்ந்து அளிக்கும் என்று உறுதி கூறியுள்ளார். கிலானியுடன் பேசிய புஷ், பாகிஸ்தானின் புதிய அதிபர் தேர்தல் குறித்தும் பேசினார். அதே போல, அதிபர் அதிகாரத்தையும் பார்லிமென்ட் அதிகாரத்தையும், வகைப்படுத்துவது எப்போது என்பது குறித் தும் அவர் கேட்டார். "அதிபர் தேர்தல் குறித்து அனைத்து விஷயங்களையும், தேர்தல் தேதியையும் முடிவு செய்யும் முழு அதிகாரம் தேர்தல் கமிஷனுக்குத் தான் உண்டு. பார்லிமென்ட் மற்றும் அதிபர் அதிகாரங்களை சமப்படுத்தும் வகையில், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கிலானி தெரிவித்தார்."பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே வலுவான உறவு நீடிக்கிறது. பாகிஸ்தானின் ஜனநாயக அரசுக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து அளிக்கப்படும்' என்று புஷ் கூறினார். உரையாடலின் போது, ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது, கிலானியுடன் நடந்த சந்திப்பு குறித்து நினைவு கூர்ந்த புஷ், முன்னாள் பிரதமர் பெனசிரின் குழந்தைகளை தனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது, பெனசிரின் குழந்தைகளும், புஷ்சை சந்தித்து பேசியதால் பெரிதும் உற்சாகத்தில் இருப்பதாகவும், அவர்களைப் போலவே, பெனசிரின் கணவரும் மகிழ்ச்சியில் இருப் பதாகவும் கிலானி கூறினார்.


பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய தொடர்ந்து அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த கிலானி, இதற்காக அரசும், மக்களும் அமெரிக்காவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப் பதாகவும் கூறினார். பின்னர், பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தனது இரங்கலை புஷ் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எப். 16 ரக விமானங்களை வழங்கியதற்காகவும், பழைய எப் - 16 விமானங்களை மேம்படுத்த 465 கோடி ரூபாய் நிதி வழங்கியதற்கும் கிலானி நன்றி தெரிவித்தார்.அதே போல, முஷாரப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புஷ், பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்புவதற்கு அவர் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். அதே போல, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், முஷாரப் அளித்த ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். முடிவு அமெரிக்கா கையில்: இந்த டெலிபோன் பேச்சு, மாறிவரும் பாகிஸ் தான் சூழ்நிலையை புஷ் ஆதரிப்பதாகக் காட்டுகிறது. பாகிஸ்தானில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அது முதலில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கண்டலீசா ரைசால் அனுமதிக்கப்பட வேண் டும் என்று கூறுகின்றனர். தற்போது பாக்., அதிபர் முஷாரப் பதவி விலக அமெரிக்கா, ராணுவம், சவுதி அரேபியா ஆகிய மூன்று சக்திகள் செயல் பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் நலனைவிட, முஷாரபின் நட்பு அல் லது நெருக்கம் தேவையில்லை என்று ராணுவத் தளபதி கியானி முடிவு செய்துவிட்டார்.

இப்போது கிலானியுடன் டெலிபோனில் பேசியபின் அதிபர் முஷாரபிடம் பேசியிருக்கிறார். அதற்குமுன் கடந்தவாரத்தில் முஷாரப் நெருக்கடிகளைச் சந்தித்த போது அதிபர் புஷ்ஷிடம் பேச முடியவில்லை. பத்து நாட்களுக்கு முன் சவுதி நாட்டின் உளவுத் துறைத் தலைவர் இளவரசர் முக்ரீன் பின் அப்துல் அசீஸ் இஸ்லாமாபாத் வந்து நவாஸ், சர்தாரி உட்பட எல்லாத் தலைவர்களுடனும் பேசியிருக்கிறார். அப்போது அவர், "எவரும் கேலி செய்து சிரிப் பிற்கு ஆளாகாத வகையில், அதே சமயம் முடிவும் காணப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார். இவை எல்லாம் பாகிஸ்தானில் அடுத்து வரும் மாற்றம் நிஜமாகவே ஜனநாயகம் வலுப்படுமா, அல்லது புதிய குழப்பத்துடன், அமெரிக்கா சொல்படி நடக்கும் நம்பிக்கை நிர்வாகம் உருவெடுக்குமா என்பது இனித் தெரியும்.

Posted in | 1 comments

'ஒலிம்பிக்' போட்டியில் தங்கம் வென்ற கோவை வீரர் : ரூ.500 உதவித்தொகை கிடைக்காமல் 17 ஆண்டாக தவிப்பு??!!


அமெரிக்காவில் 1991ம் ஆண்டு நடந்த "சிறப்பு ஒலிம்பிக் போட்டியில்' தங்கம் வென்ற மனவளர்ச்சி குன்றிய கோவை வீரர், அரசின் உதவித்தொகை ரூ.500 கிடைக்காமல் 17 ஆண்டுகளாக தவம் கிடக்கிறார். சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. உடல் ஆரோக்கியமுள்ள இந்திய விளையாட்டு வீரர்கள் பலர் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், 1991ல் அமெரிக்காவில் நடந்த "இன்டர்நேஷனல் சம்மர் ஸ்பெஷல் ஒலிம்பிக்' போட்டியில், தங்கத்தை தட்டி வந்தார் கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி.
தற்போது, ஒலிம்பிக் போட்டியில் தங்கமோ, வெள்ளியோ பெற்றால் மத்திய, மாநில அரசுகளும், தொழிலதிபர்களும் கோடிகளை பரிசாகக் கொட்டுகின்றனர். ஆனால், கிருஷ்ணமூர்த்தி தங்கம் வென்றும், மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை பரிசு மட்டுமல்ல; எந்த உதவியும் செய்யவில்லை. அது மட்டுமின்றி, ஊனமுற்றோருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.500 கூட இவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் விஜயராமன். கோவை மணியகராம்பாளையத்தில் மனைவி, மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் வசிக்கிறார். மேட்டுப்பாளையம் வித்யவிகாசினி பள்ளியில் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, நீளம் தாண்டுதல், ஓடுதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றான். பள்ளிகளுக்கு இடையே(உடல் ஊனமுற்ற) நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்றான்.
மாவட்ட, மாநில அளவில், தேசிய அளவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், வெற்றி சான்றிதழ்களையும் குவித்தான். பின், பள்ளியின் மூலம் அமெரிக்காவில் உள்ள மின்னஸோடா மாநிலம் மினியா போல்ஸ் நகரில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றான். பெங்களூரு திரும்பியதும், அன்றைய கர்நாடக மாநில கவர்னர் குர்சித் மட்டும் ரூ. ஐந்தாயிரம் பரிசு வழங்கினார். கிருஷ்ணமூர்த்திக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கப்பட்டது. மருத்துவச் சான்றிதழ் 55 சதவீதம் மட்டுமே ஊனம் என தெரிவித்ததால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 60 சதவீத ஊனச் சான்றிதழ் கிடைத்திருந்தால் உதவித்தொகை கிடைத்திருக்கும். பலமுறை முயன்றும் உதவித்தொகை பெற முடியவில்லை

Posted in | 0 comments