'ஒலிம்பிக்' போட்டியில் தங்கம் வென்ற கோவை வீரர் : ரூ.500 உதவித்தொகை கிடைக்காமல் 17 ஆண்டாக தவிப்பு??!!


அமெரிக்காவில் 1991ம் ஆண்டு நடந்த "சிறப்பு ஒலிம்பிக் போட்டியில்' தங்கம் வென்ற மனவளர்ச்சி குன்றிய கோவை வீரர், அரசின் உதவித்தொகை ரூ.500 கிடைக்காமல் 17 ஆண்டுகளாக தவம் கிடக்கிறார். சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. உடல் ஆரோக்கியமுள்ள இந்திய விளையாட்டு வீரர்கள் பலர் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், 1991ல் அமெரிக்காவில் நடந்த "இன்டர்நேஷனல் சம்மர் ஸ்பெஷல் ஒலிம்பிக்' போட்டியில், தங்கத்தை தட்டி வந்தார் கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி.
தற்போது, ஒலிம்பிக் போட்டியில் தங்கமோ, வெள்ளியோ பெற்றால் மத்திய, மாநில அரசுகளும், தொழிலதிபர்களும் கோடிகளை பரிசாகக் கொட்டுகின்றனர். ஆனால், கிருஷ்ணமூர்த்தி தங்கம் வென்றும், மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை பரிசு மட்டுமல்ல; எந்த உதவியும் செய்யவில்லை. அது மட்டுமின்றி, ஊனமுற்றோருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.500 கூட இவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் விஜயராமன். கோவை மணியகராம்பாளையத்தில் மனைவி, மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் வசிக்கிறார். மேட்டுப்பாளையம் வித்யவிகாசினி பள்ளியில் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, நீளம் தாண்டுதல், ஓடுதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றான். பள்ளிகளுக்கு இடையே(உடல் ஊனமுற்ற) நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்றான்.
மாவட்ட, மாநில அளவில், தேசிய அளவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், வெற்றி சான்றிதழ்களையும் குவித்தான். பின், பள்ளியின் மூலம் அமெரிக்காவில் உள்ள மின்னஸோடா மாநிலம் மினியா போல்ஸ் நகரில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றான். பெங்களூரு திரும்பியதும், அன்றைய கர்நாடக மாநில கவர்னர் குர்சித் மட்டும் ரூ. ஐந்தாயிரம் பரிசு வழங்கினார். கிருஷ்ணமூர்த்திக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கப்பட்டது. மருத்துவச் சான்றிதழ் 55 சதவீதம் மட்டுமே ஊனம் என தெரிவித்ததால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 60 சதவீத ஊனச் சான்றிதழ் கிடைத்திருந்தால் உதவித்தொகை கிடைத்திருக்கும். பலமுறை முயன்றும் உதவித்தொகை பெற முடியவில்லை

Posted in |

0 comments: