முஷாரபை கைகழுவுகிறார் அதிபர் புஷ.....!!

http://pakobserver.net/200805/19/todayspic/19052008-front.jpg

அதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் யூசுப் ரசா கிலானியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் தனது நிர்வாகம் தொடர்ந்து அளிக்கும் என்று உறுதி கூறியுள்ளார். கிலானியுடன் பேசிய புஷ், பாகிஸ்தானின் புதிய அதிபர் தேர்தல் குறித்தும் பேசினார். அதே போல, அதிபர் அதிகாரத்தையும் பார்லிமென்ட் அதிகாரத்தையும், வகைப்படுத்துவது எப்போது என்பது குறித் தும் அவர் கேட்டார். "அதிபர் தேர்தல் குறித்து அனைத்து விஷயங்களையும், தேர்தல் தேதியையும் முடிவு செய்யும் முழு அதிகாரம் தேர்தல் கமிஷனுக்குத் தான் உண்டு. பார்லிமென்ட் மற்றும் அதிபர் அதிகாரங்களை சமப்படுத்தும் வகையில், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கிலானி தெரிவித்தார்."பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே வலுவான உறவு நீடிக்கிறது. பாகிஸ்தானின் ஜனநாயக அரசுக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து அளிக்கப்படும்' என்று புஷ் கூறினார். உரையாடலின் போது, ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது, கிலானியுடன் நடந்த சந்திப்பு குறித்து நினைவு கூர்ந்த புஷ், முன்னாள் பிரதமர் பெனசிரின் குழந்தைகளை தனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது, பெனசிரின் குழந்தைகளும், புஷ்சை சந்தித்து பேசியதால் பெரிதும் உற்சாகத்தில் இருப்பதாகவும், அவர்களைப் போலவே, பெனசிரின் கணவரும் மகிழ்ச்சியில் இருப் பதாகவும் கிலானி கூறினார்.


பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய தொடர்ந்து அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த கிலானி, இதற்காக அரசும், மக்களும் அமெரிக்காவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப் பதாகவும் கூறினார். பின்னர், பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தனது இரங்கலை புஷ் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எப். 16 ரக விமானங்களை வழங்கியதற்காகவும், பழைய எப் - 16 விமானங்களை மேம்படுத்த 465 கோடி ரூபாய் நிதி வழங்கியதற்கும் கிலானி நன்றி தெரிவித்தார்.அதே போல, முஷாரப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புஷ், பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்புவதற்கு அவர் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். அதே போல, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், முஷாரப் அளித்த ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். முடிவு அமெரிக்கா கையில்: இந்த டெலிபோன் பேச்சு, மாறிவரும் பாகிஸ் தான் சூழ்நிலையை புஷ் ஆதரிப்பதாகக் காட்டுகிறது. பாகிஸ்தானில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அது முதலில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கண்டலீசா ரைசால் அனுமதிக்கப்பட வேண் டும் என்று கூறுகின்றனர். தற்போது பாக்., அதிபர் முஷாரப் பதவி விலக அமெரிக்கா, ராணுவம், சவுதி அரேபியா ஆகிய மூன்று சக்திகள் செயல் பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் நலனைவிட, முஷாரபின் நட்பு அல் லது நெருக்கம் தேவையில்லை என்று ராணுவத் தளபதி கியானி முடிவு செய்துவிட்டார்.

இப்போது கிலானியுடன் டெலிபோனில் பேசியபின் அதிபர் முஷாரபிடம் பேசியிருக்கிறார். அதற்குமுன் கடந்தவாரத்தில் முஷாரப் நெருக்கடிகளைச் சந்தித்த போது அதிபர் புஷ்ஷிடம் பேச முடியவில்லை. பத்து நாட்களுக்கு முன் சவுதி நாட்டின் உளவுத் துறைத் தலைவர் இளவரசர் முக்ரீன் பின் அப்துல் அசீஸ் இஸ்லாமாபாத் வந்து நவாஸ், சர்தாரி உட்பட எல்லாத் தலைவர்களுடனும் பேசியிருக்கிறார். அப்போது அவர், "எவரும் கேலி செய்து சிரிப் பிற்கு ஆளாகாத வகையில், அதே சமயம் முடிவும் காணப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார். இவை எல்லாம் பாகிஸ்தானில் அடுத்து வரும் மாற்றம் நிஜமாகவே ஜனநாயகம் வலுப்படுமா, அல்லது புதிய குழப்பத்துடன், அமெரிக்கா சொல்படி நடக்கும் நம்பிக்கை நிர்வாகம் உருவெடுக்குமா என்பது இனித் தெரியும்.

Posted in |

1 comments:

  1. winprofx.com Says:

    Best Forex Trading Platforms in India provide traders with advanced tools, real-time market data, and a seamless trading experience to navigate the dynamic forex market. These platforms are designed to cater to both beginners and experienced traders, offering features such as interactive charts, technical indicators, automated trading options, and mobile accessibility. A top-quality forex trading platform combines security, fast execution speeds, competitive pricing, and user-friendly navigation to help traders make informed decisions. By choosing a reliable forex trading platform in India, traders can access global currency markets efficiently, manage risk effectively, and take advantage of trading opportunities with confidence and convenience.