முஷாரபை கைகழுவுகிறார் அதிபர் புஷ.....!!
Posted On 8/22/08 at by citizenஅதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் யூசுப் ரசா கிலானியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் தனது நிர்வாகம் தொடர்ந்து அளிக்கும் என்று உறுதி கூறியுள்ளார். கிலானியுடன் பேசிய புஷ், பாகிஸ்தானின் புதிய அதிபர் தேர்தல் குறித்தும் பேசினார். அதே போல, அதிபர் அதிகாரத்தையும் பார்லிமென்ட் அதிகாரத்தையும், வகைப்படுத்துவது எப்போது என்பது குறித் தும் அவர் கேட்டார். "அதிபர் தேர்தல் குறித்து அனைத்து விஷயங்களையும், தேர்தல் தேதியையும் முடிவு செய்யும் முழு அதிகாரம் தேர்தல் கமிஷனுக்குத் தான் உண்டு. பார்லிமென்ட் மற்றும் அதிபர் அதிகாரங்களை சமப்படுத்தும் வகையில், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கிலானி தெரிவித்தார்."பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே வலுவான உறவு நீடிக்கிறது. பாகிஸ்தானின் ஜனநாயக அரசுக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து அளிக்கப்படும்' என்று புஷ் கூறினார். உரையாடலின் போது, ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது, கிலானியுடன் நடந்த சந்திப்பு குறித்து நினைவு கூர்ந்த புஷ், முன்னாள் பிரதமர் பெனசிரின் குழந்தைகளை தனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது, பெனசிரின் குழந்தைகளும், புஷ்சை சந்தித்து பேசியதால் பெரிதும் உற்சாகத்தில் இருப்பதாகவும், அவர்களைப் போலவே, பெனசிரின் கணவரும் மகிழ்ச்சியில் இருப் பதாகவும் கிலானி கூறினார்.
பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய தொடர்ந்து அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த கிலானி, இதற்காக அரசும், மக்களும் அமெரிக்காவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப் பதாகவும் கூறினார். பின்னர், பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தனது இரங்கலை புஷ் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எப். 16 ரக விமானங்களை வழங்கியதற்காகவும், பழைய எப் - 16 விமானங்களை மேம்படுத்த 465 கோடி ரூபாய் நிதி வழங்கியதற்கும் கிலானி நன்றி தெரிவித்தார்.அதே போல, முஷாரப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புஷ், பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்புவதற்கு அவர் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். அதே போல, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், முஷாரப் அளித்த ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். முடிவு அமெரிக்கா கையில்: இந்த டெலிபோன் பேச்சு, மாறிவரும் பாகிஸ் தான் சூழ்நிலையை புஷ் ஆதரிப்பதாகக் காட்டுகிறது. பாகிஸ்தானில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அது முதலில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கண்டலீசா ரைசால் அனுமதிக்கப்பட வேண் டும் என்று கூறுகின்றனர். தற்போது பாக்., அதிபர் முஷாரப் பதவி விலக அமெரிக்கா, ராணுவம், சவுதி அரேபியா ஆகிய மூன்று சக்திகள் செயல் பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் நலனைவிட, முஷாரபின் நட்பு அல் லது நெருக்கம் தேவையில்லை என்று ராணுவத் தளபதி கியானி முடிவு செய்துவிட்டார்.
'ஒலிம்பிக்' போட்டியில் தங்கம் வென்ற கோவை வீரர் : ரூ.500 உதவித்தொகை கிடைக்காமல் 17 ஆண்டாக தவிப்பு??!!
Posted On 8/21/08 at by citizen
அமெரிக்காவில் 1991ம் ஆண்டு நடந்த "சிறப்பு ஒலிம்பிக் போட்டியில்' தங்கம் வென்ற மனவளர்ச்சி குன்றிய கோவை வீரர், அரசின் உதவித்தொகை ரூ.500 கிடைக்காமல் 17 ஆண்டுகளாக தவம் கிடக்கிறார். சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. உடல் ஆரோக்கியமுள்ள இந்திய விளையாட்டு வீரர்கள் பலர் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், 1991ல் அமெரிக்காவில் நடந்த "இன்டர்நேஷனல் சம்மர் ஸ்பெஷல் ஒலிம்பிக்' போட்டியில், தங்கத்தை தட்டி வந்தார் கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி.
தற்போது, ஒலிம்பிக் போட்டியில் தங்கமோ, வெள்ளியோ பெற்றால் மத்திய, மாநில அரசுகளும், தொழிலதிபர்களும் கோடிகளை பரிசாகக் கொட்டுகின்றனர். ஆனால், கிருஷ்ணமூர்த்தி தங்கம் வென்றும், மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை பரிசு மட்டுமல்ல; எந்த உதவியும் செய்யவில்லை. அது மட்டுமின்றி, ஊனமுற்றோருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.500 கூட இவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் விஜயராமன். கோவை மணியகராம்பாளையத்தில் மனைவி, மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் வசிக்கிறார். மேட்டுப்பாளையம் வித்யவிகாசினி பள்ளியில் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, நீளம் தாண்டுதல், ஓடுதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றான். பள்ளிகளுக்கு இடையே(உடல் ஊனமுற்ற) நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்றான்.
மாவட்ட, மாநில அளவில், தேசிய அளவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், வெற்றி சான்றிதழ்களையும் குவித்தான். பின், பள்ளியின் மூலம் அமெரிக்காவில் உள்ள மின்னஸோடா மாநிலம் மினியா போல்ஸ் நகரில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றான். பெங்களூரு திரும்பியதும், அன்றைய கர்நாடக மாநில கவர்னர் குர்சித் மட்டும் ரூ. ஐந்தாயிரம் பரிசு வழங்கினார். கிருஷ்ணமூர்த்திக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கப்பட்டது. மருத்துவச் சான்றிதழ் 55 சதவீதம் மட்டுமே ஊனம் என தெரிவித்ததால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 60 சதவீத ஊனச் சான்றிதழ் கிடைத்திருந்தால் உதவித்தொகை கிடைத்திருக்கும். பலமுறை முயன்றும் உதவித்தொகை பெற முடியவில்லை
சென்னை விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு பீதி.....!!
Posted On 8/12/08 at by citizenபார்வையாளர்கள் விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதங்கள் நேராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கிடந்த ஒரு வாட்டர் பில்டர், வெடிகுண்டு பீதியை நேற்று ஏற்படுத்தியது.
பன்னாட்டு முனையத்தின் ஒரு பகுதியில், தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கு, நேற்று காலை 10 மணிக்கு கேட்பாரற்ற நிலையில், பல மணி நேரமாக ஒரு பேப்பர் பை கிடந்தது. நீண்ட நேரமாக கிடந்த அந்தப் பையை அருகில் சென்று பார்த்த போது, அதில் ஒயர்கள் சுற்றிய நிலையில் சில பொருட்கள் இருப்பது தெரிந்தது. அது வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதி கிளம்பியது. தகவல் அறிந்த வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் குறிப்பிட்ட பையை பாதுகாப்பாக கைப்பற்றி, சோதனையிட்டனர். அதில், பைக்குள் வாட்டர் பில்டரும், அதற்கான பாகங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதுவரை அங்கு நிலவிவந்த வெடிகுண்டு பீதி முடிவுக்கு வந்தது.
தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி.........!!!
Posted On at by citizenசர்வதேச அளவில் நேற்று காலை ஒரு அவுன்ஸ் தங்கம் 825.90 டாலராக இருந்தது. வர்த்தக முடிவில் இது 801.90 டாலராகக் குறைந்தது. மற்றொரு பக்கம் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 113 டாலர் வரை நேற்று வந்ததன் காரணமாக, பலரும் தங்கத்தில் செய்திருந்த முதலீட்டை விட்டு, எண்ணெய் பக்கம் சாய்ந்தனர். மும்பையில் சுத்த தங்கம் (24 காரட்) கிராம் ஆயிரத்து 100லிருந்து 945 வரை சரிந்தது. ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆயிரத்து 96ஆக இருந்தது. நேற்று ஆயிரத்து 33 ஆக குறைந்தது. இதனால், ஒரு சவரனுக்கு 504 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 8 ஆயிரத்து 264 ஆக இருந்தது. இது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு விலை குறைந்தது. ஆடி மாதம் முடிந்து அடுத்து ஆவணி பிறக்க இருப்பதால், விலை குறைவைப் பயன்படுத்தி தங்க நகைகளை வாங்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக ஆடித் தள்ளுபடியில் துணிகள் வாங்குவதற்குப் பதில் நகைகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டத்தை நகைக் கடைகளில் அதிகம் பார்க்க முடிகிறது.
இதய வலியால் அவதிப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் : தமிழக மருத்துவர்கள் சாதனை...!!
Posted On 8/11/08 at by citizenபண்ணாரி அடுத்த பசுவபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்; கூலி தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி(13); அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாள். குழந்தைப் பருவத்தில் இருந்தே, அடிக்கடி சளி, இருமல் பாதிப்பு புவனேஸ்வரிக்கு இருந்தது. கடந்த சில மாதங்களாக நெஞ்சு வலியாலும் அவதிப்பட்டாள். இதை தொடர்ந்து இவளது பெற்றோர், அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்ற போது பரிசோதித்த டாக்டர்கள், புவனேஸ்வரிக்கு காச நோய் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறி, அதற்கான சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
இதன் பேரில் தங்கராஜ், கடந்த மாதம் கோவை அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரியை சிகிச்சைக்காக அனுமதித்தார். அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரிக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அவளுக்கு இடது புற நுரையீரல் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன், சுத்த ரத்தக்குழாய் மற்றும் அசுத்த ரத்தக்குழாய்களில் இடையே உள்ள துவாரத்தின் வழியே இரு ரத்தமும் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் டாக்டர் ஜெயராமன் தலைமையில், டாக்டர்கள் வனிதா மணி, ராதிகா, சுகந்தி ஆகியோர் அடங்கிய குழு, புவனேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
இதய அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் ஜெயராமன் கூறியதாவது: நோயாளியை பரிசோதனை செய்யும் போது, அவருக்கு பிறவியிலேயே ஒரு நுரையீரல் மட்டுமே இருப்பது தெரிந்தது. இடது புறம் இதயத்துக்கு மேல்புறம் இருக்க வேண்டிய நுரையீரல் இவருக்கு இல்லை. லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இது போன்று இருக்கும். ஒரு கிட்னியுடன் எப்படி வாழ முடியுமோ, அப்படியே ஒரு நுரையீரலுடனும் வாழலாம். இவ்வாறு பிறக்கும் 50 சதவீதம் குழந்தைகளுக்கு இதய கோளாறு இருக்கும்; இதய துவாரங்களுடன் இக்குழந்தைகள் இருப்பர்.
தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி புவனேஸ்வரிக்கு, இதய பிரச்னையுடன், இதயத்தில் இருந்து வெளியேறும் சுத்த ரத்த பெரிய தமனியும், அசுத்த ரத்த பெருஞ்சிரையும் கலந்தால் ஆபத்து என்பது தெரிந்தது. இதனால், புவனேஸ்வரிக்கு வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சியும், பெண்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் இயற்கையான நிகழ்வுகளும் ஏற்படாமல் குழந்தையாகவே உள்ளார். இடது புறம் இதயம் இருப்பதால், நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வது கடினம்.
அதனால், முதுகு பகுதியை ஒட்டி இதயத்துக்கு எந்த பாதிப்பும் வராமல், இரு ரத்தக்குழாயையும் இணைத்திருந்த பாகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினோம். கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; இனி, எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது. உடலும் வயதுக்கேற்ற வளர்ச்சி அடையும். இவ்வாறு டாக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து ஜெயலலிதா முக்கிய முடிவு.....??
Posted On 8/10/08 at by citizenஅ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தனது தலைமையில் "தேர்தலுக்கு முன்பு; தேர்தலுக்கு பின்பு' என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதால், தமிழகத்தில் அணி மாற்றம் உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் பிரகாஷ் கராத் அளித்த பேட்டி ஒன்றில், "தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு பிற மாநிலங்களில் ஒரு நிலைப்பாடு என்பது கடந்த காலத்தில் மேற்கொண்டு இருக்கலாம். ஆனால், அதில் எங்களுக்கு இப்போது உடன்பாடில்லை. காங்கிரசுடனும் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைவதற்கு துணைபோகிற கட்சிகளுடனும் நாங்கள் தேர்தல் உறவு வைத்துக்கொள்ள மாட்டோம்' என தெரிவித்துள்ளார்.கடந்த 6, 7ம் தேதிகளில் புதுக்கோட்டையில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில், இந்த விஷயம் தெளிவாக்கப்பட்டுள்ளது. "காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகளுடன் மற்ற கட்சிகள் கொண்டுள்ள உறவைப் பொறுத்தே, அந்தக் கட்சிகளுடனான தனது நிலைப் பாட்டை தீர்மானிப்போம். மத்திய குழு எடுத்துள்ள இந்த முடிவின் திசையிலேயே தமிழக அரசியல் கட்சிகளுடனான உறவுகளும் அமையும் என்பதை தெளிவுபடுத்துகிறோம்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பா.ஜ., வுடன் உறவு வைத்துக் கொண்டால், சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற முடியாது; இடதுசாரிகளுடன் கூட்டணி வைக்க முடியாது என்பதால் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி என்ற முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் பேச்சால் வசூல் குறைந்தது : தியேட்டர் உரிமையாளர்கள்
Posted On at by citizenபடம் ரிலீசாவதற்கு சில நாட்களுக்கு முன், "குசேலன் ' படம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், "இப்படத்தில் எனது பங்கு 25 சதவீதம் தான். இது ரஜினிகாந்த் படம் அல்ல; பசுபதி படம்' என்று கூறியிருந்தார். இதனால், தியேட்டருக்கு ரசிகர்களின் வருகை குறைவாக இருப்பதாகவும், பட ரிலீசுக்கு முதல்நாள் கன்னடர்களை சமாதானம் செய்து ரஜினி அளித்த பேட்டியால், வசூல் பெருமளவு பாதித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, தியேட்டர் உரிமையாளர்கள், மதுரையிலுள்ள பிரமிட் சாய்மீரா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது : படத்தை திரையிட நாங்கள் பணம் கட்டிய பிறகு ரஜினி பேட்டி அளித்தார். இதனால், போட்ட காசை எடுக்க முடியவில்லை. வங்கிகள் மற்றும் தனியார் பைனான்சியர்களிடம் 75 சதவீதம் கடன் வாங்கி இப்படத்தை திரையிட்டுள்ளோம். இதுவரை வட்டியுடன் சேர்த்து 90 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்களது நிலைமை கருதி "மினிமம் கியாரண்டியை' டெபாசிட் தொகையாக மாற்றி, வருவாயில் எங்களுக்குண்டான சதவீதத்தை கணக்கிட்டு தரவேண்டும். இல்லாவிட்டால், 12ம் தேதி, சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் முன், உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். ரஜினி இவ்விஷயத்தில் தலையிட்டு பகிரங்க அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர்.
செவ்வாயில் தண்ணீர்.....!!
Posted On 8/2/08 at by citizen
அமெரிக்காவின் நாசா அனுப்பிய பீனிக்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.இது பற்றி அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் வில்லியம் பாய்ன்டன், நாசா அறிக்கையில் கூறியதாவது:செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளை முன்னரே ஒடிசி விண்கலம் கண்டுபிடித்தது. கடந்த மாதம், தண்ணீர் கட்டிகளை பீனிக்ஸ் கண்டுபிடித்தது.
ஆனால், செவ்வாய் கிரக தண்ணீரை உறுதி செய்வது இதுவே முதல் முறை.இவ்வாறு வில்லியம் பாய்ன்டன் கூறினார்.




