பார்வை இருந்தும் இருளில் தவிக்கும் மக்கள்: விஜயகாந்த்


சென்னை: பார்வையற்றவர்கள் இருளைப் பற்றி கவலைப்படாமல் செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு இன்றைக்கு இருண்டு போய் இருப்பதால் வெளிச்சம் இல்லாமல் நாம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.தேமுதிக சார்பில் பார்வையற்றோருக்கான 'கேப்டன் வாழ்வொளித் திட்டம்' தொடக்க விழா இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் முன்னிலை வகித்தனர்.திட்டத்தை கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மாஃபா பாண்டியராஜன் இந்தத் திட்டம் குறித்து விளக்கினார்.இத்திட்டத்தில் முதல் கட்டமாக சேர்ந்து பயிற்சி பெறவுள்ள 300 பார்வையற்றோருக்கு பிரேம லதா அடையாள அட்டைகளை வழங்கினார்.7 பார்வையற்றோருக்கு தொழில் முனைவோருக்கான முதலீட்டுத் தொகையாக தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.1.75 லட்சத்தை விஜயகாந்த் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ர்வையற்றவர்களால் வெளிச்சத்தை காண முடியவில்லை. ஆனால் நாட்டில் சிலர் பார்வையிருந்தும் பார்வையில்லாதவர்களாக இருக்கிறார்கள்.என்னுடைய ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றிய நாளில் பார்வையற்றவர்களை வைத்துதான் நான் பாட்டுக் கச்சேரி நடத்தினேன்.மற்ற அரசியல் கட்சிகளில் ஊனமுற்றோருக்கென தனி அணி கிடையாது. ஆனால் தேமுதிகவில் மட்டும் ஊனமுற்றோர் அணி உள்ளது.திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக குத்து விளக்கேற்றியதும் ஒளி கிடைத்தது. ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சியில் தமிழகம் இருண்டுப் போய் உள்ளது.பார்வையற்றவர்கள் இருளைப் பற்றி கவலைப்படாமல் செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு இன்றைக்கு இருண்டு போய் இருப்பதால் வெளிச்சம் இல்லாமல் நாம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம்.சிலர் ஓட்டுக்காக மட்டும் பார்வையற்றவர்களை அணுகுவார்கள். அவர்களுடைய ஓட்டுக்களை பெற வாக்குறுதிகளையும் அள்ளி வீசுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் அவற்றை மறந்துவிடுவார்கள்.ஆனால் தேமுதிக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேமுதிக சார்பில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவேன் என்று தெரிவித்தேன். அது முடியுமா என்று சிலர் கேட்டார்கள். நிச்சயமாக முடியும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வாழ்வொளித் திட்டத்தின் மூலம் பார்வையற்றவர்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி, சுய தொழிலுக்கு வழிகாட்டல், கணினி அடிப்படை கல்வி, பார்வையற்றவர்களுக்கான சிறப்பு மென்பொருள் பயிற்சி ஆகிய பயிற்சிகள் 3 மாதங்களுக்கு 60 கணினி பயிற்சி மையங்களில் அளிக்கப்படும். அத்துடன் அவர்கள் வேலை வாய்ப்பு பெறவும், சொந்தமாக தொழில் தொடங்கவும் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.கடந்த ஆண்டு எனது பிறந்த நாளின்போது ரூ.25 லட்சம் செலவில் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினேன். இந்த ஆண்டு ரூ.1.5 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் 60 இலவச கணினி பயிற்சி மையங்கள் தொடங்கியிருக்கிறோம்.அதன் தொடர்ச்சியாக தற்போது பார்வையற்றவர்களுக்கான வாழ்வொளித் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். என்னோடு அரசியலில் பல்வேறு கட்சியினர் போட்டிப் போடுகிறார்கள். அவர்கள் இதுபோன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் போட்டி போடலாமே? என்றார்.

நன்றி: த்ட்ஸ் தமிழ்

இவண்- ரவிகுமார் (சென்னை)

Posted in | 2 comments

எந்திரன் விளம்பர படங்கள்...........!!



எந்திரன் வெற்றி பெற தமிழ்துளியின் வாழ்த்துக்கள் ..............!!

Posted in | 3 comments

ப்ரியாமணிக்கு தேசிய விருது.....!!



சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணிக்கு
தமிழ்துளியின் உளமிகுந்த வாழ்த்துக்கள் .......!!!!

Posted in | 1 comments

முஷாரபை கைகழுவுகிறார் அதிபர் புஷ.....!!

http://pakobserver.net/200805/19/todayspic/19052008-front.jpg

அதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் யூசுப் ரசா கிலானியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் தனது நிர்வாகம் தொடர்ந்து அளிக்கும் என்று உறுதி கூறியுள்ளார். கிலானியுடன் பேசிய புஷ், பாகிஸ்தானின் புதிய அதிபர் தேர்தல் குறித்தும் பேசினார். அதே போல, அதிபர் அதிகாரத்தையும் பார்லிமென்ட் அதிகாரத்தையும், வகைப்படுத்துவது எப்போது என்பது குறித் தும் அவர் கேட்டார். "அதிபர் தேர்தல் குறித்து அனைத்து விஷயங்களையும், தேர்தல் தேதியையும் முடிவு செய்யும் முழு அதிகாரம் தேர்தல் கமிஷனுக்குத் தான் உண்டு. பார்லிமென்ட் மற்றும் அதிபர் அதிகாரங்களை சமப்படுத்தும் வகையில், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கிலானி தெரிவித்தார்."பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே வலுவான உறவு நீடிக்கிறது. பாகிஸ்தானின் ஜனநாயக அரசுக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து அளிக்கப்படும்' என்று புஷ் கூறினார். உரையாடலின் போது, ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது, கிலானியுடன் நடந்த சந்திப்பு குறித்து நினைவு கூர்ந்த புஷ், முன்னாள் பிரதமர் பெனசிரின் குழந்தைகளை தனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது, பெனசிரின் குழந்தைகளும், புஷ்சை சந்தித்து பேசியதால் பெரிதும் உற்சாகத்தில் இருப்பதாகவும், அவர்களைப் போலவே, பெனசிரின் கணவரும் மகிழ்ச்சியில் இருப் பதாகவும் கிலானி கூறினார்.


பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய தொடர்ந்து அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த கிலானி, இதற்காக அரசும், மக்களும் அமெரிக்காவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப் பதாகவும் கூறினார். பின்னர், பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தனது இரங்கலை புஷ் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எப். 16 ரக விமானங்களை வழங்கியதற்காகவும், பழைய எப் - 16 விமானங்களை மேம்படுத்த 465 கோடி ரூபாய் நிதி வழங்கியதற்கும் கிலானி நன்றி தெரிவித்தார்.அதே போல, முஷாரப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புஷ், பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்புவதற்கு அவர் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். அதே போல, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், முஷாரப் அளித்த ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். முடிவு அமெரிக்கா கையில்: இந்த டெலிபோன் பேச்சு, மாறிவரும் பாகிஸ் தான் சூழ்நிலையை புஷ் ஆதரிப்பதாகக் காட்டுகிறது. பாகிஸ்தானில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அது முதலில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கண்டலீசா ரைசால் அனுமதிக்கப்பட வேண் டும் என்று கூறுகின்றனர். தற்போது பாக்., அதிபர் முஷாரப் பதவி விலக அமெரிக்கா, ராணுவம், சவுதி அரேபியா ஆகிய மூன்று சக்திகள் செயல் பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் நலனைவிட, முஷாரபின் நட்பு அல் லது நெருக்கம் தேவையில்லை என்று ராணுவத் தளபதி கியானி முடிவு செய்துவிட்டார்.

இப்போது கிலானியுடன் டெலிபோனில் பேசியபின் அதிபர் முஷாரபிடம் பேசியிருக்கிறார். அதற்குமுன் கடந்தவாரத்தில் முஷாரப் நெருக்கடிகளைச் சந்தித்த போது அதிபர் புஷ்ஷிடம் பேச முடியவில்லை. பத்து நாட்களுக்கு முன் சவுதி நாட்டின் உளவுத் துறைத் தலைவர் இளவரசர் முக்ரீன் பின் அப்துல் அசீஸ் இஸ்லாமாபாத் வந்து நவாஸ், சர்தாரி உட்பட எல்லாத் தலைவர்களுடனும் பேசியிருக்கிறார். அப்போது அவர், "எவரும் கேலி செய்து சிரிப் பிற்கு ஆளாகாத வகையில், அதே சமயம் முடிவும் காணப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார். இவை எல்லாம் பாகிஸ்தானில் அடுத்து வரும் மாற்றம் நிஜமாகவே ஜனநாயகம் வலுப்படுமா, அல்லது புதிய குழப்பத்துடன், அமெரிக்கா சொல்படி நடக்கும் நம்பிக்கை நிர்வாகம் உருவெடுக்குமா என்பது இனித் தெரியும்.

Posted in | 1 comments

'ஒலிம்பிக்' போட்டியில் தங்கம் வென்ற கோவை வீரர் : ரூ.500 உதவித்தொகை கிடைக்காமல் 17 ஆண்டாக தவிப்பு??!!


அமெரிக்காவில் 1991ம் ஆண்டு நடந்த "சிறப்பு ஒலிம்பிக் போட்டியில்' தங்கம் வென்ற மனவளர்ச்சி குன்றிய கோவை வீரர், அரசின் உதவித்தொகை ரூ.500 கிடைக்காமல் 17 ஆண்டுகளாக தவம் கிடக்கிறார். சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. உடல் ஆரோக்கியமுள்ள இந்திய விளையாட்டு வீரர்கள் பலர் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், 1991ல் அமெரிக்காவில் நடந்த "இன்டர்நேஷனல் சம்மர் ஸ்பெஷல் ஒலிம்பிக்' போட்டியில், தங்கத்தை தட்டி வந்தார் கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி.
தற்போது, ஒலிம்பிக் போட்டியில் தங்கமோ, வெள்ளியோ பெற்றால் மத்திய, மாநில அரசுகளும், தொழிலதிபர்களும் கோடிகளை பரிசாகக் கொட்டுகின்றனர். ஆனால், கிருஷ்ணமூர்த்தி தங்கம் வென்றும், மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை பரிசு மட்டுமல்ல; எந்த உதவியும் செய்யவில்லை. அது மட்டுமின்றி, ஊனமுற்றோருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.500 கூட இவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் விஜயராமன். கோவை மணியகராம்பாளையத்தில் மனைவி, மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் வசிக்கிறார். மேட்டுப்பாளையம் வித்யவிகாசினி பள்ளியில் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, நீளம் தாண்டுதல், ஓடுதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றான். பள்ளிகளுக்கு இடையே(உடல் ஊனமுற்ற) நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்றான்.
மாவட்ட, மாநில அளவில், தேசிய அளவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், வெற்றி சான்றிதழ்களையும் குவித்தான். பின், பள்ளியின் மூலம் அமெரிக்காவில் உள்ள மின்னஸோடா மாநிலம் மினியா போல்ஸ் நகரில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றான். பெங்களூரு திரும்பியதும், அன்றைய கர்நாடக மாநில கவர்னர் குர்சித் மட்டும் ரூ. ஐந்தாயிரம் பரிசு வழங்கினார். கிருஷ்ணமூர்த்திக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கப்பட்டது. மருத்துவச் சான்றிதழ் 55 சதவீதம் மட்டுமே ஊனம் என தெரிவித்ததால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 60 சதவீத ஊனச் சான்றிதழ் கிடைத்திருந்தால் உதவித்தொகை கிடைத்திருக்கும். பலமுறை முயன்றும் உதவித்தொகை பெற முடியவில்லை

Posted in | 0 comments

சென்னை விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு பீதி.....!!


சென்னை விமான நிலைய வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த வாட்டர் பில்ட்டரால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. சென்னை விமான நிலையம் பலத்த மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் நுழையும் வாகனங்கள் கடுமையாக சோதனை செய்யப்படுகின்றன.
பார்வையாளர்கள் விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதங்கள் நேராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கிடந்த ஒரு வாட்டர் பில்டர், வெடிகுண்டு பீதியை நேற்று ஏற்படுத்தியது.
பன்னாட்டு முனையத்தின் ஒரு பகுதியில், தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கு, நேற்று காலை 10 மணிக்கு கேட்பாரற்ற நிலையில், பல மணி நேரமாக ஒரு பேப்பர் பை கிடந்தது. நீண்ட நேரமாக கிடந்த அந்தப் பையை அருகில் சென்று பார்த்த போது, அதில் ஒயர்கள் சுற்றிய நிலையில் சில பொருட்கள் இருப்பது தெரிந்தது. அது வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதி கிளம்பியது. தகவல் அறிந்த வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் குறிப்பிட்ட பையை பாதுகாப்பாக கைப்பற்றி, சோதனையிட்டனர். அதில், பைக்குள் வாட்டர் பில்டரும், அதற்கான பாகங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதுவரை அங்கு நிலவிவந்த வெடிகுண்டு பீதி முடிவுக்கு வந்தது.
நன்றி:தினமலர்

Posted in | 0 comments

தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி.........!!!


தங்கம் விலை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.500 குறைந்தது. கடந்த சில மாதங்களாக எட்டா உயரத்திலிருந்த தங்கம், இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவரத் துவங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து இறங்கி வருவது தான். "கமாடிட்டி மார்க்கெட்' என சொல்லப்படும் ஆன்-லைனில் நடக்கும் பொருட்கள் சந்தையில் இதுவரை தங்கத்தில் முதலீடு செய்திருந்தவர்கள் கச்சா எண்ணெய் பக்கம் தங்கள் முதலீடுகளை மாற்றிக் கொண்டு வருவதால் தங்கம் விலை குறைந்து வருகிறது. போதாக் குறைக்கு அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ மதிப்பு குறைந்து வருவதும் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
சர்வதேச அளவில் நேற்று காலை ஒரு அவுன்ஸ் தங்கம் 825.90 டாலராக இருந்தது. வர்த்தக முடிவில் இது 801.90 டாலராகக் குறைந்தது. மற்றொரு பக்கம் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 113 டாலர் வரை நேற்று வந்ததன் காரணமாக, பலரும் தங்கத்தில் செய்திருந்த முதலீட்டை விட்டு, எண்ணெய் பக்கம் சாய்ந்தனர். மும்பையில் சுத்த தங்கம் (24 காரட்) கிராம் ஆயிரத்து 100லிருந்து 945 வரை சரிந்தது. ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆயிரத்து 96ஆக இருந்தது. நேற்று ஆயிரத்து 33 ஆக குறைந்தது. இதனால், ஒரு சவரனுக்கு 504 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 8 ஆயிரத்து 264 ஆக இருந்தது. இது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு விலை குறைந்தது. ஆடி மாதம் முடிந்து அடுத்து ஆவணி பிறக்க இருப்பதால், விலை குறைவைப் பயன்படுத்தி தங்க நகைகளை வாங்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக ஆடித் தள்ளுபடியில் துணிகள் வாங்குவதற்குப் பதில் நகைகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டத்தை நகைக் கடைகளில் அதிகம் பார்க்க முடிகிறது.

Posted in | 0 comments

இதய வலியால் அவதிப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் : தமிழக மருத்துவர்கள் சாதனை...!!

கோவை: பிறக்கும் போதே ஒரு பக்க நுரையீரல் இல்லாமல், இதய நோயால் அவதிப்பட்ட 13 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
பண்ணாரி அடுத்த பசுவபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்; கூலி தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி(13); அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாள். குழந்தைப் பருவத்தில் இருந்தே, அடிக்கடி சளி, இருமல் பாதிப்பு புவனேஸ்வரிக்கு இருந்தது. கடந்த சில மாதங்களாக நெஞ்சு வலியாலும் அவதிப்பட்டாள். இதை தொடர்ந்து இவளது பெற்றோர், அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்ற போது பரிசோதித்த டாக்டர்கள், புவனேஸ்வரிக்கு காச நோய் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறி, அதற்கான சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
இதன் பேரில் தங்கராஜ், கடந்த மாதம் கோவை அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரியை சிகிச்சைக்காக அனுமதித்தார். அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரிக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அவளுக்கு இடது புற நுரையீரல் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன், சுத்த ரத்தக்குழாய் மற்றும் அசுத்த ரத்தக்குழாய்களில் இடையே உள்ள துவாரத்தின் வழியே இரு ரத்தமும் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் டாக்டர் ஜெயராமன் தலைமையில், டாக்டர்கள் வனிதா மணி, ராதிகா, சுகந்தி ஆகியோர் அடங்கிய குழு, புவனேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
இதய அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் ஜெயராமன் கூறியதாவது: நோயாளியை பரிசோதனை செய்யும் போது, அவருக்கு பிறவியிலேயே ஒரு நுரையீரல் மட்டுமே இருப்பது தெரிந்தது. இடது புறம் இதயத்துக்கு மேல்புறம் இருக்க வேண்டிய நுரையீரல் இவருக்கு இல்லை. லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இது போன்று இருக்கும். ஒரு கிட்னியுடன் எப்படி வாழ முடியுமோ, அப்படியே ஒரு நுரையீரலுடனும் வாழலாம். இவ்வாறு பிறக்கும் 50 சதவீதம் குழந்தைகளுக்கு இதய கோளாறு இருக்கும்; இதய துவாரங்களுடன் இக்குழந்தைகள் இருப்பர்.
தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி புவனேஸ்வரிக்கு, இதய பிரச்னையுடன், இதயத்தில் இருந்து வெளியேறும் சுத்த ரத்த பெரிய தமனியும், அசுத்த ரத்த பெருஞ்சிரையும் கலந்தால் ஆபத்து என்பது தெரிந்தது. இதனால், புவனேஸ்வரிக்கு வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சியும், பெண்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் இயற்கையான நிகழ்வுகளும் ஏற்படாமல் குழந்தையாகவே உள்ளார். இடது புறம் இதயம் இருப்பதால், நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வது கடினம்.
அதனால், முதுகு பகுதியை ஒட்டி இதயத்துக்கு எந்த பாதிப்பும் வராமல், இரு ரத்தக்குழாயையும் இணைத்திருந்த பாகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினோம். கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; இனி, எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது. உடலும் வயதுக்கேற்ற வளர்ச்சி அடையும். இவ்வாறு டாக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.
நன்றி:தினமலர்

Posted in | 0 comments

கூட்டணி குறித்து ஜெயலலிதா முக்கிய முடிவு.....??



அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே கூட்டணி அச்சாரம் போடத் துவங்கிவிட்டன. காங்கிரஸ், பா.ஜ., என்ற இரு தேசிய கட்சிகளின் தலைமையில் உள்ள அணிகளுக்கு மாற்றாக, மூன்றாவது அணி, தேசிய அளவில் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி தலைமையில் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தனது தலைமையில் "தேர்தலுக்கு முன்பு; தேர்தலுக்கு பின்பு' என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதால், தமிழகத்தில் அணி மாற்றம் உறுதியாகியுள்ளது.


தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க., அணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும், அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., தேசிய லீக் ஆகிய கட்சிகளும் தற்போது இருக்கின்றன. அ.தி.மு.க., அணியில் பா.ஜ., இடம்பெற விரும்புகிறது. ஆனால், அ.தி.மு.க.,விடமிருந்து "கிரீன் சிக்னல்' கிடைக்கவில்லை. மாயாவதி தலைமையில், தேசிய அளவில் மூன்றாவது அணி அமைந்துள்ளதால், தமிழகத்தில் உள்ள அரசியல் கூட்டணியிலும் அணி மாற்றம் இருக்கும் என நம்புகிறது அ.தி.மு.க., வட்டாரம். அதாவது ஜெயலலிதா தனது தலைமையில், தேர்தலுக்கு முன்பு (தே.மு.,) தேர்தலுக்கு பின்பு (தே.பி.,) என்ற கூட்டணி பார்முலாவை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.தேர்தலுக்கு முன்பு, தமக்கு ஒத்துவரும் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்துவிட்டு, தேர்தல் முடிவு தெரிந்த பிறகு, மத்திய ஆட்சியில் இடம்பெறுவதற்குரிய வகையில் கூட்டணியை வைக்க அவர் திட்டமிட்டள்ளார்.தி.மு.க., கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளை தனது அணிக்கு கொண்டுவர அ.தி.மு.க., விரும்புகிறது. காங்கிரசை விட்டு பிரிவதில்லை என தி.மு.க., கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதால், இடதுசாரிகளும் அ.தி.மு.க., கூட்டணிக்கான கதவைத் திறந்துவைத்துள்ளனர்.


சமீபத்தில் பிரகாஷ் கராத் அளித்த பேட்டி ஒன்றில், "தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு பிற மாநிலங்களில் ஒரு நிலைப்பாடு என்பது கடந்த காலத்தில் மேற்கொண்டு இருக்கலாம். ஆனால், அதில் எங்களுக்கு இப்போது உடன்பாடில்லை. காங்கிரசுடனும் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைவதற்கு துணைபோகிற கட்சிகளுடனும் நாங்கள் தேர்தல் உறவு வைத்துக்கொள்ள மாட்டோம்' என தெரிவித்துள்ளார்.கடந்த 6, 7ம் தேதிகளில் புதுக்கோட்டையில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில், இந்த விஷயம் தெளிவாக்கப்பட்டுள்ளது. "காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகளுடன் மற்ற கட்சிகள் கொண்டுள்ள உறவைப் பொறுத்தே, அந்தக் கட்சிகளுடனான தனது நிலைப் பாட்டை தீர்மானிப்போம். மத்திய குழு எடுத்துள்ள இந்த முடிவின் திசையிலேயே தமிழக அரசியல் கட்சிகளுடனான உறவுகளும் அமையும் என்பதை தெளிவுபடுத்துகிறோம்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பா.ஜ., வுடன் உறவு வைத்துக் கொண்டால், சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற முடியாது; இடதுசாரிகளுடன் கூட்டணி வைக்க முடியாது என்பதால் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி என்ற முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளார்.

இந்த முடிவு முழுவடிவம் பெறும்போது, தேசிய அளவில் இருப்பது போல் தமிழகத்திலும் மூன்று அணிகள் உருவாகுவதை தவிர்க்க முடியாது.
நன்றி : தினமலர்

Posted in | 0 comments

ரஜினிகாந்த் பேச்சால் வசூல் குறைந்தது : தியேட்டர் உரிமையாளர்கள்



மதுரை: ரஜினிகாந்த் நடித்த "குசேலன்' படத்தால் நஷ்டம் அடைந்திருப்பதாகக் கூறி, மதுரையில் நேற்று, பிரமிட் சாய்மீரா தயாரிப்பு நிறுவனத்தை, தியேட்டர் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். ஜினியின் "குசேலன்' படம், மதுரையில் ஐந்து தியேட்டர்களிலும், தென் மாவட்டங்களில் 26 தியேட்டர்களிலும் திரையிடப்பட்டுள்ளது. பிரமிட் சாய்மீரா மற்றும் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், திரையிடுவது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, "முழுக்க முழுக்க இது ரஜினி படம். "சிவாஜியை' விட ஒரு மடங்கு வசூல் அதிகரிக்கும்' என்று கூறி "மினிமம் கியாரண்டி முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
படம் ரிலீசாவதற்கு சில நாட்களுக்கு முன், "குசேலன் ' படம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், "இப்படத்தில் எனது பங்கு 25 சதவீதம் தான். இது ரஜினிகாந்த் படம் அல்ல; பசுபதி படம்' என்று கூறியிருந்தார். இதனால், தியேட்டருக்கு ரசிகர்களின் வருகை குறைவாக இருப்பதாகவும், பட ரிலீசுக்கு முதல்நாள் கன்னடர்களை சமாதானம் செய்து ரஜினி அளித்த பேட்டியால், வசூல் பெருமளவு பாதித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, தியேட்டர் உரிமையாளர்கள், மதுரையிலுள்ள பிரமிட் சாய்மீரா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது : படத்தை திரையிட நாங்கள் பணம் கட்டிய பிறகு ரஜினி பேட்டி அளித்தார். இதனால், போட்ட காசை எடுக்க முடியவில்லை. வங்கிகள் மற்றும் தனியார் பைனான்சியர்களிடம் 75 சதவீதம் கடன் வாங்கி இப்படத்தை திரையிட்டுள்ளோம். இதுவரை வட்டியுடன் சேர்த்து 90 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்களது நிலைமை கருதி "மினிமம் கியாரண்டியை' டெபாசிட் தொகையாக மாற்றி, வருவாயில் எங்களுக்குண்டான சதவீதத்தை கணக்கிட்டு தரவேண்டும். இல்லாவிட்டால், 12ம் தேதி, சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் முன், உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். ரஜினி இவ்விஷயத்தில் தலையிட்டு பகிரங்க அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர்.

Posted in | 0 comments

செவ்வாயில் தண்ணீர்.....!!



அமெரிக்காவின் நாசா அனுப்பிய பீனிக்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.இது பற்றி அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் வில்லியம் பாய்ன்டன், நாசா அறிக்கையில் கூறியதாவது:செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளை முன்னரே ஒடிசி விண்கலம் கண்டுபிடித்தது. கடந்த மாதம், தண்ணீர் கட்டிகளை பீனிக்ஸ் கண்டுபிடித்தது.
ஆனால், செவ்வாய் கிரக தண்ணீரை உறுதி செய்வது இதுவே முதல் முறை.இவ்வாறு வில்லியம் பாய்ன்டன் கூறினார்.

Posted in | 0 comments

காலத்தின் கோலம் :


Posted in | 0 comments

கமல்ஹாசனின் மர்மயோகியில் வித்தியாசமான இசை ஒலிகளை அறிமுகப்படுத்தும் ரஹ்மான்....!!!!!!


கமல்ஹாசனின் அடுத்த மெகா பட்ஜெட் படமான மர்மயோகியில் மிக வித்தியாசமான இசை ஒலிகளை அறிமுகப்படுத்தும் ஐடியாவில் உள்ளார் ரஹ்மான்.
இந்தப் படத்துக்காக, இதுவரை தமிழ் திரையில் ஒலித்திராத லத்தீன் அமெரிக்க பாணி இசைக் கருவிகளை மர்மயோகிக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார் ரஹ்மான்.
சமீபத்தில் ஒரு இசைவிழாவுக்கு வந்திருந்த ரஹ்மானிடம் இதுபற்றிக் கேட்டபோது, நான் எல்லா படங்களுக்குமே பெஸ்ட் இசையைத் தரவே முயற்சிக்கிறேன். முயற்சிதான் என்னுடையது. மற்றபடி பாடல்களின் தலைவிதி ரசிகர்களின் மன நிலையைப் பொறுத்தே அமைகிறது. சில நேரங்களில் அதிகபட்ச விளம்பரங்கள் கூட ஒரு இசையை திரும்பத் திரும்ப கேட்க வைத்து விடும்.
ஆனால் உண்மையான இசை எப்போதும் நிலைத்திருக்கும். மர்மயோகி ஒன்லைன் மட்டும்தான் எனக்குத் தெரியும். வித்தியாசமான ஒரு முயற்சி. அதற்கு வித்தியாசமான இசையைத் தரவே முயற்சிக்கிறேன்.
இதில் சில புதிய ஒலிகளை அறிமுகப்படுத்த லத்தீன் அமெரிக்க இசைக் கருவிகளை உபயோகிக்கும் திட்டம் உள்ளது. இசைக்கு நல்ல ஸ்கோப் உள்ள கதை என்பதால் உங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காத அளவுக்கு பாடல்கள் இருக்கும் என்றார் அடக்கமாக.
சமீபத்தில் உங்களை நடிக்க வைக்கும் திட்டத்தில் இருப்பதாக பாரதிராஜா கூறினாரா... அப்படி ஏதாவது எண்ணமிருக்கிறதா?
(சிரிக்கிறார்) அவர் என்மீதுள்ள அன்பில் அப்படிச் சொல்லியிருப்பார். இசைக்கே நேரம் ஒதுக்க முடியவில்லை என்றார்.
சமீபத்தில் வெளியான இசை ஆல்பங்களில் குசேலனுக்கு அடுத்து அதிக சிடிக்கள் விற்று சாதனை படைத்துள்ளது ரஹ்மானின் சக்கரகட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் அவர் இசையைத்து வெளிவந்துள்ள ஜானே து ய ஜானே நா பெரும் சாதனை புரிந்து வருகிறது.

. ரவிக்குமார் ( சென்னை)

Posted in | 1 comments

வெள்ளித்திரையில் தோன்றுகிறார் சச்சின் ....!!!!!


இதுவரை விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்து வந்த உங்கள் சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக வெள்ளித் திரையிலும் தனது நடிப்பாற்றலைக் காட்ட வருகிறார்.
கடவுள் கணேசரின் திருவிளையாடல்களை விளக்கும் பாலிவுட் படம் ஒன்றில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் சினிமாவிலும் அவ்வப்போது தலை காட்டுவது சகஜமாகி வருவது. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரும் நடிக்க வருகிறார்.
விக்னஹர்த்த ஸ்ரீ சித்திவிநாயக் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கிரிக்கெட் வீரராகவே சச்சின் நடிக்கிறார். இதுகுறித்து இப்படத்தை தயாரிக்கும் ராஜீவ் சிங்வி கூறுகையில், சிறிய ரோலில் சச்சின் நடிக்கிறார். ஒரு பாடல் காட்சியிலோ அல்லது கிரிக்கெட் விளையாடுவது போன்றோ சச்சின் நடிப்பார்.
சச்சின் விநாயகரின் பக்தர். எனவே இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கேட்டதும் அவர் ஒப்புக் கொண்டார். இலவசமாக நடித்துத் தரவும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார் சிங்வி.
இப்படத்தை மும்பையில் உள்ள பிரபல சித்திவிநாயக் கோவில் அறக்கட்டளை தயாரிக்கிறது.
அறக்கட்டளை தலைவர் சுபாஷ் மேயகர் கூறுகையில், சித்திவிநாயக் கோவிலுக்கு பல வருடங்களாக சச்சின் வந்து செல்கிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விநாயகர் பல வழிகளிலும் உறுதுணையாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க அவர் மனமுவந்து ஒத்துக் கொண்டார் என்றார்.
தற்போது இலங்கை டெஸ்ட் பயணத்தில் இருக்கும் சச்சின் அதை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் ஷூட்டிங்குக்குப் போகிறாராம். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் அமிதாப் பச்சன் தனது குரலை கொடுக்கவுள்ளாராம்.
சச்சினை 'பெப்சி' கைவிட்டாலும் 'பிள்ளையார்' கைவிடவில்லை. சச்சின், நல்லா நடிங்க, அப்படியே ஆட்டத்தையும் பார்த்துக்குங்க!

நன்றி -- தட்ஸ் தமிழ்
. ரவிக்குமார்( சென்னை)

Posted in | 0 comments

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு நிலவரம் : அனைத்து ரயில்களும் "ஹவுஸ் புல்"



அக்டோர் 27ம் தேதி தீபாவளி வருவதால் 24, 25ம் தேதிகளில் பாண்டியன், முத்துநகர், கன்னியகுமரி எக்ஸ்பிரஸ் உட்பட ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி மற்றும் ஏ.சி., மூன்றாம் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ரயில் டிக்கெட் ஏஜென்டுகள் போலி பெயர்களில் முன்பதிவு செய்துவிட்டார்களோ என்று பயணிகள் சந்தேகப்படுகின்றனர். ரயில்களில் 90 நாட்கள் வரை முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் விசேஷ நாட்களுக்கான முன்பதிவு முன்கூட்டியே செய்யப்பட்டுவிடுகிறது.
அக்டோர் 27ல் திங்கள்கிழமையன்று தீபாவளி வருகிறது. 25ம் தேதி சனி, 26ம் தேதி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் 24ம் தேதி வெள்ளிக் கிழமையும், 25ம் தேதி சனிக்கிழ�யும் பல ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு டிக்கெட் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏ.சி., டிக்கெட் முழுவதும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
* சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 23, 24, மற்றும் 25ம் தேதிகளில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 23ம் தேதி இருக்கை வசதிக்கு காத்திருப்போர் பட்டியலில் 60 பேரும், 24ம் தேதி 300 பேரும், 25ம் தேதி 80 பேரும் உள்ளனர். மூன்றாம் வகுப்பு ஏ.சி., வகுப்பில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் அனைத்து டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 24ம் தேதி காத்திருப்போர் பட்டியலில் 14 பேரும், 25ம் தேதி 14 பேரும் இருக்கை வசதிக்கு காத்திருக்கின்றனர்.
* கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, ராக்போர்ட், அனந்தபுரி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி டிக்கெட்களும், மூன்றாம் வகுப்பு ஏ.சி., வகுப்பு டிக்கெட்களும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு பெட்டியில் இருக்கை வசதிக்கு 80 பேரிலிருந்து 300 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் குறைந்த இடங்களே உள்ளன. உயர் வகுப்பு டிக்கெட்களிலும் குறைந்த இடங்களே உள்ளன.
சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 24ம் தேதி இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) டிக்கெட்கள், ஏ.சி., மூன்றாம் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. உயர் வகுப்பு டிக்கெட்களும் குறைந்தளவே உள்ளன.
நேற்று ஞாயிற்றுக் கிழமை. காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை தான் டிக்கெட் கவுன்டர்கள் இயங்கின. அதற்குள்ளாகவே அனைத்து முக்கிய ரயில்களின் டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ரயில் டிக்கெட் வாங்குவதற்கு அனுமதி பெற்ற டிராவல் ஏஜென்டுகள், போலி ஏஜென்டுகள் பண்டிகையைப் பயன்படுத்தி, டிக்கெட்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக அதிகளவில் முன்பதிவு செய்திருக்கலோமோ என பயணிகள் சந்தேகப்படுகின்றனர். நேற்றைய டிக்கெட் முன்பதிவு குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினால் விண்ணப்பங்கள் உண்மையானதா?
போலி பெயர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என தெரியவரும் என்றும் பயணிகள் கூறுகின்றனர்.

நன்றி : தினமலர்.காம்

Posted in | 1 comments

ஆடி கிருத்திகை திருவிழா : திருத்தணியில் பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி: ஆடிக்கிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து முருகனை தரிசனம் செய்தனர்.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் தெப்பத் திருவிழா சிறப்பாக நடந்தது. இதை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி வந்தனர். பல பக்தர்கள் காவடி எடுத்து, பாத யாத்திரையாக வந்து சுவாமியை தரிசித்தனர்.மேல் திருத்தணி நல்லாங்குளம் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளத்தில், பக்தர்கள் காவடியுடன் புனித நீராடினர்.
பக்திப் பாடல்கள் பாடிக் கொண்டு மலைப்படிகள் வழியாக காவடி எடுத்து, தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பெரும்பாலானோர் காவடி எடுத்து வந்து, மொட்டை அடித்து புனித நீராடினர். சிலர் பம்பை, உடுக்கை, சிலம்பு ஆட்டத்துடன் ஆடிக் கொண்டு மலைக்கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்த, உடல் முழுவதும் அலகு குத்திக் கொண்டு முருகனை வழிபட்டனர்.மூலவர் முருகனுக்கு மரகதக்கல், தங்கக் கிரீடம், தங்க வேல் மற்றும் நகை அலங்காரம், புஷ்ப அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
பழநி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு வகையான மலர்களால், முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. திருப்பதி மலைக்கோவிலில் இருந்து சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இதே போல், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட "கியூ' வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
தெப்பத் திருவிழா: நேற்று தெப்பத் திருவிழாவில் மலைக்கோவிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளத்திற்கு வருகை தந்தார். மாலை 6.30 மணிக்கு தெப்பத்தில் உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேக, அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. முருகன் தெப்பத்தை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு பாலித்தார்.
* சிவா (சென்னை) *

Posted in | 0 comments

அகமதாபாத்தில் இன்று மாலை அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டு வெடிப்பு...!!!!


பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பின் பயங்கரம் இன்னும் அகலாத நிலையில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று மாலை அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டுகள் வெடித்து நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் 4 பேர் பலியாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
பெங்களூரில் நேற்று முன்தினம் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இன்றும் அங்கு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜவஹர் செளக், சக்லா, சரங்பூர், அம்ரல்வாடி, கோவிந்த்வாடி-கிஷான்பூர், ஹத்கேஸ்வர், மணி நகர், பாபு நகர் உள்பட 13 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
சைக்கிள்கள்- டிபன் பாக்ஸ்களில்:
மாலை 6.45 மணியளவில் பாபு நகரில் முதல் குண்டு வெடித்தது.வெடிகுண்டுள் அனைத்தும் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புகளில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 4 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் மணி நகர் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. அதேபோல பாபு நகரில், ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அகமதாபாத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளை போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரைப் போலவே அகமதபாத்திலும் குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் கண்டனம்:
குஜராத் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக மாநிலங்களில்:
நேற்று தொடர் குண்டுவெடிப்பு நடந்த கர்நாடகத்திலும், இன்று நடந்துள்ள குஜராத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
(நன்றி -- தட்ஸ் தமிழ் )

இவண்,
திரு..ரவிக்குமார்(சென்னை )

Posted in | 0 comments

வெக்கம்னா என்னன்னே தெரியாது....சுவாதி ...!!!!


வெக்கம்னா என்னன்னே தெரியாத என்னையும் நடிக்க வைச்சிட்டாங்க, என்கிறார் சுப்பிரமணியபுரம் நாயகி ஸ்வாதி.
விரிந்த விழிகள், வெட்கம் சிந்தும் பார்வை, கவிதைச் சிரிப்பு என சுப்பிரமணியபுரத்தில் இளசுகளின் மனசை அள்ளியவர் 'கலர்ஸ்' ஸ்வாதி. தெலுங்கு மா டிவியில் தொகுப்பாளரான இவர், செல்வராகவனின் சூப்பர் ஹிட் தெலுங்குப் படமான ஆடவாரி மாட்டலாகு அர்த்தலே வேறுலே படத்தில் த்ரிஷாவின் தங்கையாக வந்து கலக்கினார்.
அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தாலும், சுப்பிரமணியபுரம் வாய்ப்பு வந்ததும் அனைத்தையும் உதறிவிட்டு இந்த படத்திலேயே முழுமையாக கவனம் செலுத்தி வந்தார்.
அதற்கான பலன் இப்போது கைமேல் கிடைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் நன்கு நடிக்கத் தெரிந்த புதுமுகம் என்ற அங்கீகாரத்தை தனது முதல் படத்திலேயே பெற்றுவிட்டார் ஸ்வாதி. அடுத்த படத்தைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வரும்
ஸ்வாதியின் பேட்டி:

சுப்பிரமணியபுரம் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்தீர்களா?

இந்தப் படத்தை மிகவும் சின்ஸியராக எடுத்தார்கள். அந்த முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்பினேன். ஆனால் அது இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என நினைக்கவில்லை. மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

படத்தில் சாதுப் பெண்ணாக இருந்தீர்களே... நிஜத்தில் எப்படி?

அய்யோ... நான் நிஜத்தில் படு சுட்டி. ரகளைப் பேர்வழி. என்னை அந்தப் படத்தில் பார்த்துவிட்டு, ஏய்.. நீதானா அது? என்னமா கலாட்டா பண்ணுவ, இப்படி அடக்க ஒடுக்கமா நல்ல பொண்ணா எப்படி மாறினே... என எல்லாரும் கிண்டலடித்தார்கள். அந்த அளவு கலாட்டா பார்ட்டி நான்.

இந்தப் படத்தில் வெட்கப்படும் காட்சிகள் நிறையவே இருந்தன. உண்மையைச் சொல்லணும்னா, வெக்கப்படறதுன்னா என்னன்னே எனக்குத் தெரியாது.

இன்னொன்னு படம் முழுக்க முழுக்க கிராமத்தில் நடப்பது போல கதை அமைப்பு வேறு. எனக்கு கிராமமும் தெரியாது, வெக்கமும் தெரியாது (இவரல்லவா மாடர்ன் மங்கை!). இருந்தும் இயக்குநரும், யூனிட் ஆட்களும் எனக்கு மிகப் பெரிய உதவியாய் இருந்தார்கள். வெக்கப்படறது எப்படின்னு இயக்குநர் சசிகுமார்தான் சொல்லிக் கொடுத்தார். அவருக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.

அடுத்து என்ன படம்?

தெரியல... நான் எதையுமே திட்டம் போட்டுச் செய்யறதில்ல. நிறைய வாய்ப்புகள் வருது. பார்க்கலாம்... எத்தனை படம் என்பது முகியமில்லை. ஒண்ணு ரெண்டு செஞ்சாலும் பிடிச்சமாதிரி செய்யணுமே. அவ்வளவுதான், என்கிறார்.

நல்ல பாலிஸி!

இவண்
.ரவிக்குமார் (சென்னை )

Posted in | 0 comments

மத்திய அரசு வெற்றி - பங்கு சந்தையில் என்ன நடக்கும்...??

http://www.topnews.in/files/BSE-Sensex_1.jpg
இன்சூரன்ஸ் சீர்திருத்தம், வங்கி சீர்திருத்தம் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம். இது, இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகளில் இன்னும் போட்டிகளையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் கொண்டு வரும். வெளிநாட்டு வங்கிகள், இந்திய வங்கிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டலாம். உலகளவில் இந்திய வங்கிகளின் மதிப்பை உயர்த்த, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு பற்றி மறுபடி பேசப்படலாம். பொறுமை காத்தவர்களுக்கும், சரிவில் வாங்கியவர்களுக்கும் பங்குச் சந்தை சிறிது லாபத்தை கடந்த ஐந்து நாட்களில் கொடுத்திருக்கும். வரும் நாட்களிலும் சந்தையில் சிறிது முன்னேற்றம் இருக்கலாம்.அதே சமயம் சந்தையில் கையை பெரிதாகச் சுட்டுக் கொண்டு அதிலிருந்து வெளிவரத் துடித்து கொண்டு இருப்பவர்கள் பலர். அவர்கள் எல்லா ஏற்றத்திலும் விற்று வெளியே வரவேண்டும் என்று நினைப்பதால் சந்தை அதையும் தாங்கி மேலே செல்ல வேண்டும். சந்தைக்கு சிறிய முதலீட்டாளர்கள் வந்தால் தான் சந்தை பரிணமிக்கும். அதே சமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இனி சிறிது திரும்பிப் பார்ப்பர். அந்தப் பணம் உள்ளே வந்தால் பங்குச் சந்தை ஏறும். அதே சமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்புள்ளது.

இப்படிக்கு,
திரு.சிவா (சென்னை)

Posted in | 0 comments

அணு சக்தியும் 'குதிரை சக்தி'யும்-அத்வானி...!!!!!


அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரசுக்கு 'குதிரை சக்தி' (குதிரை பேரம்) தேவைப்பட்டிருக்கிறது என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 7 பாஜக எம்.பிக்கள் கட்சி மாறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்தது.இதையடுத்து இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி இல்லத்தில் பாஜக தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் மாற்றி வாக்களித்த எம்.பிக்களை கட்சியிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டது.8 எம்.பிக்கள் நீக்கம்:எம்.பிக்கள் பிரிஜ்பூஷன் சரண் சிங்,சோமாபாய் படேல், மனோரமா மாதவராஜ், சங்கிலியானா, மஞ்சுநாத் குன்னூர், பாபுபாய் கட்டாரா, ஹரிபாய் தாக்கூர், ஸ்ரீகண்டப்பா ஆகியோர் ஆகியோர் மாற்றி ஓட்டுப் போட்டவர்கள் ஆவர்.கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோர் சந்தித்தனர். அப்போது ராஜ்நாத் சிங் கூறுகையில், கட்சியின் உத்தரவை மீறி வாக்களித்த 8 எம்.பிக்களும் நீக்கப்படுவர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கறை படிந்த வெற்றிபின்னர் அத்வானி பேசத் தொடங்கினார். அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சில கட்சி தாவி எம்.பிக்களால்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. இது ஒரு கறை படிந்த வெற்றியாகும்.அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற குதிரை சக்தி (குதிரை பேரம்) அரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது.குதிரை பேரத்தால்தான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெருமளவில் பணம் கொடுத்தும் கூட அதை ஏற்க மறுத்து அவர்களை நாடாளுமன்றத்திலேயே அம்பலப்படுத்திய 3 பாஜக எம்.பிக்களை நான் பாராட்டுகிறேன்.இந்த விவகாரம் குறித்து லோக்சபா சபாநாயகர் விரிவான விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர வேண்டும்.1989ம் ஆண்டு தேர்தலை பெருமளவில் கலக்கிய போபர்ஸ் பேர ஊழலைப் போல இந்த குதிரை பேர ஊழல் எனக்குத் தோன்றுகிறது.உலக அரங்கில் மிகவும் பழமைவாய்ந்த, சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா பார்க்கப்பட்டு வருகிறது. அந்தப் பெயருக்கு இந்த லஞ்ச விவகாரம் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.பண வீக்கம் மிக மோசமாக உள்ளது. நக்சலைட் தொல்லை நாடு பூராவும் பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது.இவை அனைத்தும் தேர்தல் பிரச்சினையாக இருக்கும். பாஜக இவற்றை தேர்தல் பிரசாரத்தின்போது முன்வைக்கும் என்றார் அத்வானி.
நன்றி: தட்ஸ் தமிழ்

திரு.ரவிக்குமார் (சென்னை)

Posted in | 0 comments