யுவராஜுக்கு முன்னால் கேப்டன் கபில்தேவ் அறிவுரை
Posted On 7/21/08 at by citizen
இரவு நேர விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு, கிரிக்கெட்டில் மட்டும் யுவராஜ் கவனம் செலுத்த வேண்டுமென கபில்தேவ் ஆவேசமாக கூறியுள்ளார்.பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பை பைனலில் இந்திய அணி, இலங்கையிடம் தோல்வி அடைந்து கோப்பையை கோட்டை விட்டது. பைனலுக்கு முந்தைய நாள் இரவு கராச்சியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் யுவராஜ், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.பார்ட்டி முடிந்து அதிகாலையில் ஓட்டலுக்கு திரும்பிய இவர்கள், போதிய ஓய்வு இல்லாமல் பைனலில் பங்கேற்றனர். இவர்களால் சோபிக்க முடியாமல் போக, விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. பின்னர் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து யுவராஜ் நீக்கப்பட்டார். இவர் அடிக்கடி இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை முன்னாள் கேப்டன் கபில்தேவ் கண்டித்துள்ளார்.
இது குறித்து கபில் கூறியது:
யுவராஜ் திறமையான வீரர். இவர் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு, கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவரது தந்தை யோகராஜ் மிகச் சிறந்த டெஸ்ட் வீரராக விளங்கினார். தந்தையை போல கடினமாக முயற்சி செய்தால், யுவராஜ் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பதை யாரும் தடுக்க முடியாது என்று கபில் தேவ் கூறினார்....