மானக்ஷாவின் இறுதிச் சடங்கு : முக்கிய தலைவர்கள் வராதது ஏன்....??
Posted On 7/11/08 at by citizen
பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்காதது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான போரில் இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்த பீல்டு மார்ஷல் மானக்ஷா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் காலமானார். அவரது இறுதிச் சடங்கு ஊட்டியில் நடந்தது. இதில் நாட்டின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்கேற்கவில்லை. ராணுவ அமைச்சர் அந்தோணி கூட பங்கேற்கவில்லை.
நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர் : இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்காத தகவல் மீடியாக்கள் மூலமாக வெளிநாடுகளுக்கும் பரவியது.விஷயம் அறிந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெரும்பாலானோர் கடும் அதிருப்தி அடைந்தனர். இணையதளம் மூலமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர், "பீல்டு மார்ஷல் மானக்ஷா, நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் இறக்கவில்லை. ஊட்டியில் உள்ள வெலிங்டனில் தான் இறந்தார்.
இந்திய தலைவர்கள் செல்ல முடியாத இடம் அல்ல இது. வெலிங்டனுக்கு அருகிலேயே கோவை விமான நிலையம் உள்ளது. ஈராக்கில் பாதுகாப்பு பணியில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் இறந்தால், அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் அந்த வீரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கின்றனர். ஆனால், நாட்டிற்கு பெருமை தேடித் தந்த முன்னாள் ராணுவ தளபதி இறந்ததற்கு ராணுவ அமைச்சர் கூட கலந்து கொள்ளாதது வேதனை அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்.காம்