சந்தர்ப்பவாத அரசியல்....
Posted On 7/14/08 at by citizen
இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பா.....என்று கூறும் அளவிற்கு சந்தர்ப்பவாத அரசியல் தெருவுக்கு தெரு சந்தி சிரிக்கின்றது....
அணுசக்தி உடன்பாடு விஸ்வரூபம் எடுத்து,டெல்லி அரசியல் கலை கட்ட துவங்கி உள்ளது....
குதிரை பேரம் , எதிர்பாராத கூட்டணி....என அரசியல் சித்து விளையாட்டு
சிறகடிக்கின்றது ....
காங்கிரஸ் -- சமாஜ்வாடி கூட்டணி இதற்க்கு சாட்சி..
நேற்று வரை எலியும் - பூனையும் என்று இருந்த இவர்கள் இன்று ...
நகமும் சதையுமாக மாறியுள்ளனர்......
விளைவு.....
தற்காலிக காங்கிரஸ் எதிரியாக மாறியுள்ள செல்வி மாயாவதி மீதுள்ள சி பி ஐ வழக்கு விரைவு படுத்தப்பட்டுள்ளது .
நண்பர்களாக இருந்த இடது சாரிகள்...இன்று எதிரிகளாக மாறிவிட்டனர்.....
மாயாவதியை சந்தித்து பிரகாஷ் காரத் நட்பு கரம் நீட்டி யுள்ளார் .....
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில்....ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் குதிரை
பேரத்தில் இறங்கியுள்ளது....
இதை பயன்படுத்தி பல பிராந்திய கட்சிகள்....தங்களது சுய தேவைகளை
முன் வைக்கின்றது....
எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க பிஜேபி மற்றும் அதன் கூட்டணிகள் கங்கணம் கட்டி கொண்டு களத்தில் குதித்துள்ளது.....
இப்படி நிலை இல்லாத அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்....
மக்களாகிய நாம் இதையெல்லாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்....
இல்லை மாற்றத்தை விரும்பினால்...
தேர்தலில் விடுமுறை என்று வீட்டில் தூங்காமல்....வாக்கு சாவடி சென்று
நல்லவனுக்கு வாக்கு அளியுங்கள்....