ஓட்டுனர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள்-- போலீசார் அதிரடி
Posted On 7/17/08 at by citizen
சென்னையில் ஓட்டுனர் உரிமம் பெறாத பள்ளி மாணவர்கள் மீது மட்டும் அல்ல...அவர்களது பெற்றோர்கள் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது....
அதுவும் பல மாணவர்கள் 150சிசி வாகனங்களை பயன்படுத்துகின்றனர்....
கடந்த பத்து நாட்களில் 40 மாணவர்கள் பிடிபட்டு , வாகனம் யார் பெயரில் உள்ளதோ அவர்களுக்கு அபராதம் விதிக்க படுகிறது.....
மேலும் பள்ளி நிர்வாகத்தை பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு போலீசாரால் கேட்டு கொள்ளபட்டுள்ளது...
யாரை குற்றம் சொல்வது.....??
வாங்கி தரும் பெற்றோரையா...?
அடம் பிடிக்கும் மாணவர்களையா...??
வாகனங்களை அனுமதிக்கும் பள்ளிகளையா...??
நன்றி : ibnlive.com/news/chennais-new-worrying-trend-kids-on-bikes/69025-3.html