இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் அடிதடி....

http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_36937677861.jpg
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. அரையிறுதியில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியின் இடையே இரு அணி வீரர்களும் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா, கொரியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் ஐதராபாத்தில் நடக்கிறது.

நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய வீரர்கள் துவக்கத்திலிருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

16வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்விந்தர் சிங் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். முதல் பாதி ஆட்டம் முடிய நான்கு நிமிடங்கள் இருந்தநிலையில், பாகிஸ்தான் தற்காப்பு பகுதிக்குள் நுழைந்த இந்திய வீரர் சுனிலுக்கும், பாகிஸ்தானின் காசிப்புக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒருகட்டத்தில் முற்றி அடிதடியாக மாறியது. நிலைமை கைமீறி போவதை உணர்ந்த நடுவர்கள் மற்றும் இரு அணியின் பயிற்சியாளர்கள், தலையிட்டு வீரர்களை சமாதானப்படுத்தினர். இதனால் ஆட்டம் 10 நிமிடம் தடைபட்டது.

காயமடைந்த இந்திய கேப்டன் குர்பஷ் சிங் மற்றும் பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இரண்டாவது பாதியில் சூப்பராக விளையாடிய திவாகர் ராம் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 38வது மற்றும் 47வது நிமிடத்தில் தலா ஒரு கோலடித்து, அசத்தினார். பாகிஸ்தான் சார்பில் காசிப் அலி ஒரு கோலடித்தார். இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று, பைனலுக்குள் நுழைந்தது.

Posted in |

0 comments: