பாஜக பக்கம் சாய்கிறார் சரத்.....????
Posted On 7/19/08 at by citizenகாமராஜர் பிறந்த நாளை ஒட்டி திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவில் சரத்குமாரின் பேச்சு, சில யுகங்களை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
தி.மு.க., வுக்கு எதிராக தங்கள் கருத்தை வலுவாகவே, தொண்டர்களிடம் சரத்தும் ராதிகாவும் தெரிவித்தனர். அதேசமயம், "காங்கிரஸ் ஆட்சி செயலற்றுவிட்டது; விலைவாசி உயர்வைத் தடுக்கவில்லை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கவில்லை; பணவீக்கம் அதிகரித்துள்ளது' என மத்திய அரசு மீது அடுக்கடுக் காக குற்றம்சாட்டினார். மேலும், "விலைவாசி உயர்வைத் தடுக்க எங்களிடம் மந்திரக் கோல் இல்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். அவர்கள் பதவியிறங்கட்டும்; எங்களிடம் மந்திரக் கோல் இருக்கிறது,' என்று சரத் காட்டமாகவே கருத்து தெரிவித்தார்.
காங்கிரசையும் தி.மு.க.,வையும் வெளிப்படையாக விமர்சித்த சரத், ராதிகா ஆகியோர், அ.தி.மு.க., பற்றி வாயே திறக்கவில்லை. இருவருமே, மறைமுகமாக விஜயகாந்தை தாக்கிப் பேசினர். தேசியக் கட்சியுடன் தான் கூட்டணி என்று கூறி விட்ட நிலையில், காங்.,- பா.ஜ., இரண்டில் காங்கிரசை மட்டுமே எதிர்த்து குரல் கொடுக்கிறார் சரத்குமார். எனவே, பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக, ச.ம.க., வட்டாரத்தில் பேச்சு உலவுகிறது. லோக்சபா தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழ்நிலையில், பா.ஜ.,வுடன் பேச்சு துவங்கி விட்டதாகவும், ச.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர். இதற்காக, இரண்டு நாட்கள் முன்னால், டில்லியில் பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை சமத்துவ மக்கள் கட்சி அவைத் தலைவரான முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி முருகன், பூர்வாங்க பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.